ஆத்திசூடி

கடவுள் வாழ்த்து


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான் அமர்ந்த-விரும்பிய

தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி தொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.




1.அறம் செய விரும்ப - நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம்  - கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல் - உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு

4. ஈவது விலக்கேல் - ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.

5.உடையது விளம்பேல்- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்- கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல் -நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல் -ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

14.கண்டொன்று சொல்லேல்-. கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.

15.ஙப் போல் வளை -. '' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16.சனி நீராடு -.சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.

17.ஞயம்பட உரை- கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.

18.இடம்பட வீடு எடேல்-உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19.இணக்கம் அறிந்து இணங்கு -ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

20.தந்தை தாய்ப் பேண் -உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21.நன்றி மறவேல் - ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22.பருவத்தே பயிர் செய் - எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

23.மண் பறித்து உண்ணேல் -பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24.இயல்பு அலாதன செய்யேல் - நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

25.அரவம் ஆட்டேல். -பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26.இலவம் பஞ்சில் துயில்  -இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.

27.வஞ்சகம் பேசேல் -படச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே.

28.அழகு அலாதன செய்யேல் -.இழிவான செயல்களை செய்யாதே

29.இளமையில் கல்- இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30.அறனை மறவேல். தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.

31.அனந்தல் ஆடேல்- மிகுதியாக துங்காதே.

32.கடிவது மற-யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33.காப்பது விரதம்- தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34.கிழமை பட வாழ்-உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ.

35. கீழ்மை யகற்று-இழிவான குணஞ் செயல்களை நீக்கு.

36. குணமது கைவிடேல்- நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்- நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.

38. கெடுப்ப தொழி -பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்-கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சி செய்.

40. கைவினை கரவேல்-உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்- பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

42. கோதாட் டொழி-குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).

43.கௌவை அகற்று-வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்க.

44. சக்கர நெறி நில்- அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் ).

45.சான்றோ ரினத்திரு-அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசெல்- பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே.

47. சீர்மை மறவேல்- புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்-கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்.

49. சூது விரும்பேல்- ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்- செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்.

51.சேரிடமறிந்து சேர்-நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சையெனத் திரியேல்-பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.

53. சொற்சோர்வு படேல்- பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே.

54. சோம்பித் திரியேல்-முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

55. தக்கோ னெனத்திரி-பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.

56. தானமது விரும்பு-யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்-நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.

58. தீவினை யகற்று-பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59.துன்பத்திற் கிடங்கொடேல்-முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினைசெய்-ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்.

61. தெய்வ மிகழேல்-கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோ டொத்துவாழ்- உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்.

63. தையல்சொல் கேளேல்-மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்- பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.

65. தோற்பன தொடரேல்-ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

66. நன்மை கடைப்பிடி-நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்.

67. நாடொப் பனசெய்- நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்.

68. நிலையிற் பிரியேல்-உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. நீர்விளை யாடேல்-வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.

70. நுண்மை நுகரேல்-நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.

71. நூல்பல கல்- அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.

72.நெற்பயிர் விளை- நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட வொழுக- ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.

74. நைவினை நணுகேல்-பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.

75. நொய்ய வுரையேல்-பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கிடங் கொடேல்-மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

77. பழிப்பன பகரேல்-பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.

78. பாம்பொடு பழகேல்-பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்-குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெறநில்-பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்-உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.

82. பூமி திருத்தியுண்-விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.()விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.

83. பெரியாரைத் துணைக்கொள்-அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.

84. பேதைமை யகற்று-அறியாமையை போக்க.

85. பையலோ டிணங்கேல்-அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருடனைப் போற்றிவாழ்-பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த்தொழில் புரியேல்-யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.

88. மனந்தடு மாறேல்-எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.

89. மாற்றானுக் கிடங்கொடேல்-பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்- சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்-மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்- எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே.

93. மூர்க்கரோ டிணங்கேல்- மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

94. மெல்லினல்லாள் தோள்சேர்-பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொற்கேள்-நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

96. மைவிழியார் மனையகல்- விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்.

97. மொழிவ தறமொழி-சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்.

98.மோகத்தை முனி-நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு.

99. வல்லமை பேசேல்-உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

100. வாதுமுற் கூறேல்-பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.

101. வித்தை விரும்பு- கல்வியாகிய நற்பொருளை விரும்பு.

102. வீடு பெறநில்-முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து.

103. உத்தமனாய் இரு-உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.

104. ஊருடன் கூடிவாழ்-ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.

105. வெட்டெனப் பேசேல்-யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.

106. வேண்டி வினைசெயேல்- வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.

107. வைகறை துயிலெழு- நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு.

108. ஒன்னாரைத் தேறேல்-பகைவர்களை நம்பாதே.

109. ஓரஞ் சொல்லேல்-எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.

48 கருத்துகள்:

Unknown சொன்னது…

சனி நீராடு என்று தானே வரவேண்டும்

சனி நீராட என்று உள்ளதே எது சரி

வாழ்த்துகள்

S.P.Sivanes சொன்னது…

சனி நீராடு என்பதே சரி.நன்றி நண்பரே !

பெயரில்லா சொன்னது…

சனி நீராடு என்பது குளிர்ந்த நீரில் குளி என்பதேயாகும்

பெயரில்லா சொன்னது…

69. நீர்விளை யாடேல்-வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.

நீந்துவதும் நீரில் விளையாடுவதும் தமிழ் மரபு. எனவே, நீரை விரயம் செயாதே என்பதே பொருத்தமான விளக்கமா இருக்கலாமாம் அல்லவே.

S.P.Sivanes சொன்னது…

நண்பரெ ஆராய்ந்து பார்த்ததில் சரியான கூற்று கீழ்வருமாறு

(பதவுரை) நீர் - (ஆழம் உள்ள) நீரிலே, விளையாடேல்- (நீந்தி) விளையாடாதே.

(பொழிப்புரை) வெள்ளத்திலே நீந்தி விளையாடாதே.

Unknown சொன்னது…

இங்கு நீர்பெருக்கு (வெள்ளம்)என கொள்ளலாம்

Jothi சொன்னது…

Good Mrng Mam.

I am Jothi from India, Tamilnadu. Just only I enter this site. Its really very useful. Thanks.

S.P.Sivanes சொன்னது…

Nandri Jothi !

Unknown சொன்னது…

எம் தமிழை மிஞ்சுவதற்கு வேறு எந்த மொழிக்கு சிறப்பு இருக்கு!....தமிழனாய் பிறந்ததில் எனக்கு திமிரும் பெருமையும் சற்றே அதிகம்

Unknown சொன்னது…

Very good....

Unknown சொன்னது…

கடைப்பிடி மற்றும் கடைபிடி இரண்டுக்கும் உள்ள பொருள் என்ன

பெயரில்லா சொன்னது…

ஆத்திச்சூடி தொகுப்பும் அருமை. பின்னோடத்துக்கு உங்கள் ஏற்பும் விளக்கமும் அதைவிட அருமை

Mega சொன்னது…

கடைப்பிடி-இறுதியில் உள்ள பிடிமானம்..கடைபிடி-பின்பற்று

Unknown சொன்னது…

மிக்க நன்று.
பயனுள்ள ஒன்று.

பாலன் சொன்னது…

அரவம் ஆட்டேல் என்பதற்கு வேறு பொருளும் உண்டு. சித்தர் கூறிய பாம்பை பற்றி ஆட்டாதே உன பத்தினிமாரை பழித்து காட்டாதே என்ற பொருள் கொள்ள லாம்

ரவி சொன்னது…

தமிழனின் புகழ் எல்லையற்றது ஔவை அவர்கள் பறைசான்றும் கருத்துகள் நம் கலாச்சாரம் மற்றும் நற்பண்புகள் ஒழுக்க முறைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழனால் வகுக்கப்பட்டுள்ளது தமிழன் தான் உலகின் முதல் குடி என்பதை பார்க்கும் போது தமிழனாக பிறந்ததில் பெருமைப்படுகிறேன்.
அன்புடன் ரவி

Music Murugesan சொன்னது…

அருமை. மிக்க நன்றி.

Unknown சொன்னது…

Avvaiyarum,thiruvalluvarum,unmaiyana,uyirulla, kadavul!

Jai Guru DaTtha சொன்னது…

ங ப் போல் வளை
ங என்ற எழுத்தைப் போல் உடலை வளைத்து யோகம் செய். இவ்வாறு செய்பவர்கள் நல்ல ஆரோக்கியமா இருப்பார்கள்

இராம்கி சொன்னது…

ங ப் போல்


வளை யோகா சரி என்பது என்கருத்து

சிவ.கி.பழநி சொன்னது…

திமிர்,யாராக இருந்தாலும்,எங்கேயும்,எப்போதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல நண்பரே.பாவத்தில் பெரிய பாவம்,அகம்பாவம்.பணிவே தமிழனின் பண்பு,அடையாளம்

சிவ.கி.பழநி சொன்னது…

பெருமை இருக்கலாம், செருக்கு இருத்தல் ஆகாது

Unknown சொன்னது…

ஆத்திசூடியில் இவ்வளவு விடயங்கள் இருப்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். ஐயா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Unknown சொன்னது…

புரியாமல் மனனம் செய்த போது கசந்தது.
புரிந்த பின் தித்திக்கிறது. நன்றி

svisweswaran சொன்னது…

தையல் சொல் கேளேல் - தையல் என்ற சொல் மனைவியைக் குறிப்பதாக இருப்பின், திருமணமாகாத ஓர் பெண்ணை தையல் என்று சொல்வது தவறா?

இந்த சுட்டியில் உள்ள ஆராய்ச்சிகளைக் காண்க:
https://vikatabharathi.blogspot.com/2019/05/blog-post_5.html

Unknown சொன்னது…

தமிழர்களின் வாழ்வியல் நன்னெறி ஒருகுழந்தைஇதைகற்க்கும்போது உண்மையும் நேர்மையும் மாய் வாழ்வர்கள் நன்றி...

Thamizh சொன்னது…

7. எண் எழுத்து இகழேல்... யாவரும் கணிதம் இலக்கண நூல்கள் கற்றல் எனும் பொருள் கொள்கின்றனர்.

ஆனாலும் பிற வாக்கியங்களில் ஒட்டாமல் பொருள் இருப்பதாக உணர்கிறேன் ஐயா.
இதனில் ஆழ்ந்த பொருள் இருக்க கூடும் என கருதுகிறேன்.

எண்... எண்ணங்கள்
எழுத்து... செயல்பாடு இயக்கம்.

நல்ல எண்ணம் அதன் பொருட்டு இயக்கம் செயல்பாடு ஆகியவற்றை ஏளனம் செய்யகூடாது என பொருள் கொள்ளலாமா ஐயா.

Thamizh சொன்னது…

அரவம் என்பது ஆசை கோபம் காமம் என சித்தர்கள் சூட்சுமம்.

எனில் உலக மாயையில் உழலும் போது துன்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க... என்பதை முன்னிறுத்தியே பொருள் கொள்ளலாம் ஐயா.

Unknown சொன்னது…

மிகவும் பயன்பாடாக இருந்தது நன்றி

Unknown சொன்னது…

ஒரு வேலையை முடிப்பதற்கான...

Senthil chennai சொன்னது…

சனி நீராடு என்பது சனி என்றால் ஆறு என்று பொருள் ஆற்றில் குளிக்க வேண்டும் என்பது முறை

Unknown சொன்னது…

சிறப்பான பதிவு

Unknown சொன்னது…

வரவேற்கத்தக்கது....

பெயரில்லா சொன்னது…

உதவியாக இருந்தது நன்றி

பெயரில்லா சொன்னது…

ஜட்டி

பெயரில்லா சொன்னது…

குளிர்ந்த நீரில் குளி என்பதே பொருள்....

பெயரில்லா சொன்னது…

அரவம் பிறிதொரு பொருள் நாண் (வில் -நாண்). நாணில் விளையாட்டு வேண்டாமென பொருள் கொள்ளலாம் அல்லவா????

பெயரில்லா சொன்னது…

மோனிலா என்ற பெயரின் தமிழ் விளக்கம்
யாரேனும் சொல்லமுடியுமா.
முன்னதாக
எனது நன்றி தெரிவிக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

Ok

பெயரில்லா சொன்னது…

மிக்க நன்றி

பெயரில்லா சொன்னது…

Mathiyaadhar

பெயரில்லா சொன்னது…

மிக்க பெரும் நன்றி

வெங்கி சொன்னது…

தண்ணீரை காலால் உதைக்க கூடாது. அது தோஷம் தரும். இடுப்பு அளவு நீரில் நின்று முங்கி குளிக்கவும்

பெயரில்லா சொன்னது…

இதுப் போன்ற தமிழ் உரையாடல்களும் தேடலும் அவசியம் தேவை நம் தலைமுறைக்கு. இதன் மூலம்
தமிழ் வளத்தைத் தெரிந்துக் கொள்வர்.

அருமையான பதிவு. நன்றி சான்றோர்களே!

பெயரில்லா சொன்னது…

Ragu

பெயரில்லா சொன்னது…

கடைப்பிடி என்பதே சரி
சனி என்றால் மெதுவாக ஓடும் நீர்
சனிக்கிரகம் மெதுவாக நகரும் கிரகம்

பெயரில்லா சொன்னது…

என் பெயர் செ.சீவகன்
இன்று 5/2 தானே

பெயரில்லா சொன்னது…

அறஞ்செய்ய விரும்பு என தொடர்கின்ற அவ்வையார் அருளிய ஆத்திச்சூடி தொண்டுள்ளம்

.


.

fallen leaves  ... Pictures, Images and Photos